Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Monday, August 12, 2024

சகியே, நீ அழகு

~
ஏதேதோ நிகழ்த்திவிட்டாய் சகி.. உன்னுள் என்னை தொலைத்தது கூட நினைவில்லாத அளவு தொலைத்த நினைவைக் கூட தொலைத்திருக்கிறேன்!

இப்போதெல்லாம் என் அறைக்குள் பட்டாம்பூச்சி கூட்டம் கூட்டமாய் நெஞ்சு துளைக்க ஆயத்தமாயிருக்கிறது. வெறும் நியாபகத்தின் வாசத்தில்!

நீ படர்ந்து கிடந்த என் மார்புக் கொடியில் எவ்வளவு பூக்கள் தெரியுமா. மூச்சு முட்டக் கூடிய நெடியாக மாறிய வாசத்தின் ஆதியாகிவிட்டது அத்தனையும்!

சொட்பமாகவே முத்தமிட்டிருக்கவோ, பேசியிருக்கவோ நினைத்திருப்பேன். எப்படி என்னால் உன்னை வெறுமனே பார்த்துக் கொண்டேயிருப்பதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருக்க முடிகிறது!

ஏனிந்த மழைக்கெல்லாம் மழைக்கெல்லாம் காதலை தவிற வேறு நியாபகமே தெரியாதா. நான் முழுவதும் நனைந்து விட்டேன். கிட்டத்தட்ட உன் வியர்வை வாசம் போல்!

கரிசனம் பார்த்துக் கூட ஓர் முத்தமிட்டுக் கொள் எப்படியும் நீ தரும் முத்தம் ஓர் தழுவலாக இருந்தாலும் அஃதென் பேராசையின் நிவர்த்தி தான். உன் சார்ந்த என் முத்தம் வெறும் தீண்டல்!

அலங்கரிக்க ஆபரணம் தேவையில்லையென்று கழுத்தெழும்பை மறைத்துக் கொண்டிருக்கும் உன் ஆடம்பர அட்டிகைக்கு எப்போதுதான் தெரியப் போகிறதோ. ப்ச்!

எதற்கெடுத்தாலும் எதையோ மறைத்தே விளையாடுகிறாய். இப்போதெல்லாம் என் அணைப்புக்கான ஏக்கம் கூட உன் நிழல் தாண்டி யோசிப்பதில்லை!

உனக்கொன்று தெரியுமா. எனக்கு ஒன்று தெரியுமா என்றவுடன் ஒன்று என்று எல்லோருக்கும் ஏதோவொன்றுதான் நிரந்தரமாக முடியும். அவ்வொன்று உன்னிடம் சொல்ல வந்தவொன்று தான் நீ!

நீ நிகழ்ந்து விட்டு போன பின் நான் ஏறிட்டு பார்க்கும் எல்லாமே சலிப்புக்குரிய ஏதோவொன்றாகி விட்டிருக்கிறது. எஞ்சியது நீயெனும் கவிதைதான்!

எனக்கு அழகை பிடிக்கவேயில்லை. என்ன பெரிய அழகு. நீயெல்லாம் அழகாகவே இல்லை. நீ வெறும் சல்லாபம், சலிப்பென்று சமாதானம் செய்து வைத்திருக்கும் என் ஆழ் மனதின் எதிரிதான் உன் அழகு!

❣️

வேண்டாதிரு

~
நா உன்ன விரும்புறேன்.

ஏன்?

இதென்ன கேள்வி. பிடிச்சிருக்கு. உங்கூட வாழ நினைக்கிறேன். நீ மட்டும் போதும்ன்னு தோனுது. எனக்கு இந்த எண்ணம் யார்ட்டயும் வரல. அதான் சொல்றேன். நா உங்கூட வாழ ஆசப்படுறேன்.

ம்ம்..

என்ன ம்ம்.. நா என்ன கதையா சொல்றேன். பதில் சொல்லு. ஒவ்வொரு தடவையும் நீ வேணான்னு சொன்னாலும் உங்கிட்டயே வந்து முட்டாள்த்தனமா நிக்கிறேன்ல. சொல்லு..

இல்ல. வேணாம். எனக்கு அந்த மாதிரி யார் மேலயும் தோனல. உம்மேலயும்..

எப்பவுமே தோனாதா?

தெர்ல.. தோனாமலே போய்ட்டா என்ன ஆவேன்னு யோசிக்கிறேன். 

அப்டிலாம் இல்ல. நா வெய்ட் பண்றேன். 

வேணாம். நீ உன் வேலைய பாரு. ஒரு வரியில சொல்ல சொன்னா எனக்கு உம்மேல காதல் இல்ல.

சரி. உன் இஷ்டம். ஆனா, நா ஒன்னு கேக்கவா?

ம்ம்.. 

எத்தன நாளக்கி இப்டியே இருக்க போற. அவள மறந்து அடுத்தடுத்த கட்டத்த நோக்கி போக வேண்டியதான. நாங்கல்லாம் இருக்கோம்ல..

நா ஒன்னு சொல்லவா?

சொல்லித்தொல..

இப்ப இருக்குற நிலைமைக்கு அவளே திரும்ப எங்கிட்ட வந்தாலும் எனக்கு காதலிக்க தோனாது. அது ஒரு நம்பிக்கை. எல்லாரையும் நம்பக்கூடிய எண்ணத்த நா இழந்துட்டேன். எங்கிட்ட காதல் இல்ல.

உனக்கு எப்போ நம்பிக்கை வரும்.

சிம்பிளா சொல்றேன். உங்க எல்லாருக்காகவும் நா கண்டிப்பா வாழுவேன். நல்லா சம்பாதிச்சி செலவு பண்ணுவேன். எல்லாம் பண்ணுவேன். ஆனா, யாரோவொருத்தி நல்லாருக்குறதுக்காக சாகலாம்ன்னு எனக்கு தோனும்ல. அவள காதலிப்பேன்.

உலகமே ஆச்சரியப்படுற மாதிரி. அது வரைக்கும் இந்த தனிமை எனக்கு புடிச்சிருக்கு. 

முட்டாள் மாதிரி பேசாத..

முட்டாள்தான். காதலிச்சிருக்கேன்ல! ❣️

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...