Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Monday, January 24, 2022

தனிக்கதை

 


~

தனிப்பட்ட ஒரு கதை. ஏதோவொரு மனக்குழப்பம். கிட்டத்தட்ட அழுகை வரை பயணித்து விட்டு இறுதி மூச்சில் மூச்சடக்கி திரும்பி வரும் மன உளைச்சல். அமைதியற்ற நிலை. காது கேட்காத அளவுக்கு தலைக்குள் இரைச்சல்.


நம்மால் நிதானிக்க முடியாத அளவு ஏதாவதொரு சம்பவம் அரங்கேறும். நம் மீதான ஏதொவொரு முடிவு நம் அனுமதியின்றி நிகழ்ந்து விடும். நம் கண்டிப்பான தேவை ஒரு கட்டத்தில் நம் கையை விட்டு வீசியெறியப்படும். 


நிராயுதபாணியாக்கி தனித்து விடப்பட்ட ஒரு மனித சாயலையொத்த மிருகமாய் காணப்படுவோம். குற்றவுணர்வா, குழப்பமா என்றேயறியாத மந்தமான நிலைக்குள் நிறுத்தப்படுவோம்.


இப்போதெல்லாம் நண்பனும், நண்பியுமென்று என்னால் சுட்டிக் காட்டப்படுபவர்கள் கூட எனக்காக வருத்தம் தர முடியாத அளவுக்கு நான் அயோக்கியப் பட்டங்களை சூட்டிக் கொண்டேன்.


அது ஏனோ சலிப்புக்குள்ளாகி விட்டது. முன்பு தனியே, தன்னந்தனியே இருக்கப் பிடிப்பதேயில்லை என்று பேசத் துவங்கினேன். பிப்னே சாப்பிடுவது, தூங்குவதென்று பேசுவதையும் அத்தியாவசியமாக்கிகக் கொண்டேன்.


நிச்சயம் ஏதோவொன்றை ஆழ்மனதில் போட்டு பிசைத்து வதைத்து தன்னைத் தானே வருத்தத்திற்கு ஆளாக்கிக் கொண்டே இருப்பவர்களுக்கு வலி சொல்லி கதற வெட்கமாயிருக்கும். அதை பலமின்மையாக காட்ட விருப்பமிருக்காது.


நானென்ற மறுகணம் திமிரி நிற்கும் எவனும் நாமெனும் போது சற்றே நிதானிக்கிறான். நான் அழுவேன், அடிப்பேன், பேசுவேன், சிரிப்பேன். நாமாகி இருக்கும் போது நான் கொஞ்சம் யோசிக்கிறேன் மனிதா. ஏனென்றால் அதுதான் நான்.!


எனக்கு மனிதர்கள் எவ்வளவு முக்கியம் என்று என் முந்தைய பக்கங்களை எச்சில் படாமல் திருப்பிப் பாருங்கள். நான் இறுக்கி வைத்திருக்கும் வலி அதை நான் இப்போதெல்லாம் சொல்வதே இல்லை. அத்தனையும் நான் செய்த பிழையின் பலன்தான்.


உன்னைத் தாண்டியும் நான் இருப்பேனென்று இப்போதெல்லாம் யாரிடமும் சொல்ல முடிவதில்லை. இழப்பு, பிரிவெல்லாம் கசக்கிறது. நினைவுகளும், குரல்களும் வலிக்கிறது. எப்படி எனக்கிதுவென்று சொன்னாலும் புரியாது.!


நானென்ற பெருந்தீவு அத்தனை பேரிடரும் கடந்து புல் கூட இல்லாத வறண்ட மணல் திட்டாகி நான் மட்டும் தனியே திரிகிறேன். அவ்வப்போது கேட்கும் மனித குரல்களை இசையாக்கி ரசிக்கிறேனே அன்றி நான் பாடுவதேயில்லை..!


எல்லா பிடிமானங்களும் தளர்த்தப்பட்ட பின் கிடைக்கும் சுதந்திரம் வன்முறையானது.! ❣️

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...