~
ஒன்னுமே இல்லாம இருந்தப்பவும் ஒருத்தர் நம்ம கூட இருந்துருப்பாங்க, எல்லாமே இருந்தாலும் அப்பவும் அதே இயல்போட நம்ம கூடவே இருப்பாங்க. ஒருத்தரோ, ஒரு குறிப்பிட்ட கூட்டமோ!
ஏதோவொரு சாரர் மட்டும் நம்மல எப்பவுமே ஒரே அளவீட்டோட, அதே அன்போட, அதே உரிமையோட கையாளுவாங்க. காலையில நீ இப்டி பண்ணுனது புடிக்கலன்னு சொல்லிட்டு, மதியம் கூப்பிட்டு சாப்டியான்னு கேப்பாங்க.
ஏன் இவங்களுக்குலாம் நாம சலிச்சே போக மாட்டோமான்னு தோனும். ஒருசில நேரம் இவங்க நடிக்கிறாங்க, நிஜமாவே நாம உணர்ர, இவங்க கொடுக்குற மொத்த அன்பும் நமக்கானது இல்லன்னு தோனும்.
உண்மையில அவங்களுக்கு நாம அப்டியே புடிச்சி போய்ட்டோம். அவங்க இன்னைக்கு, நாளைக்கு, நேத்துன்னு இல்லாம மொத்தமா நம்மல இவன் இப்டிதான்னு ஏத்துக்கிட்டாங்க. இப்டி இல்லைன்னாலும் அவன் நம்மலுடயதுதான்னு உணர்ராங்க.
இந்த மாதிரியான மனிதர்களாலதான் இங்க எல்லா சூழ்நிலைய தாண்டியும் மனித ஜீவிகள் வாழுது. நாம வளந்தாலும், எத இழந்தாலும் அவங்களுக்கு ஒரு எல்லையற்ற பிரியத்திற்குரிய நாய்க்குட்டியா தெரிவோம்.
பரிசுத்தமான அன்பெனப்படுவது அழுக்காகாமல் இருப்பதல்ல. துயரில் கசடு படியும் மனதை தூய்மைப்படுத்தி மெருகேற்றுவது.
❣️


No comments:
Post a Comment