Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, January 31, 2024

என் பொருட்டு காதலென்பது


~
காதல்

செருப்பாலடித்த தடம்.
புறந்தள்ளி கொண்டாடப்பட்ட விழாக்கள்.
அவமதிக்கப்பட்ட இடம்.
ஊட்டப்படாத எனக்குரிமையான உணவு.
உடனிருக்க முடியாத உறவு.

என்னோடிருந்தும், இல்லாமலும் வாழ்வை சிதைத்த உயிர்கள்.
குற்றத்தைத் தூண்டிய மனிதர்கள்.
வாங்கிய அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள்.
புகட்டப்பட்ட பழி.
அருவருப்பான கெட்ட வார்த்தைகள்.

தூக்கியெறியப்பட்ட தூரம்.
துரத்தி விடப்பட்ட வீடு.
வெறுத்து என்னோடிருந்த தகப்பன்.
அறிமுகமற்று இல்லாமல் போன தாய்.
காட்டப்படாத அத்தியாவசிய தாயன்பு.
ஒட்டுமொத்தமான சபிக்கப்பட்ட முந்தைய வாழ்வு.

அத்தனைக்கும் பரிகாரமாய் இளமையில் என்னிடம் உலகம் கேட்ட முதல் மன்னிப்பு.
ஏற்றுக் கொண்டதற்கு பரிசாக ஒரு குரல்.

"நா உன்ன விரும்புறேன் ❤"

Thursday, January 4, 2024

கேள்வியெழாதிரு

~
என்ன வேண்டும் என்று என்னிடம் கேட்காதே.

நான் கடல் கடந்து பறந்து கொண்டிருக்கும் போது நிலம் கேட்பேன்.
ஓய்வெடுக்கும் நிலத்தில் இருந்து கடல் காதலிப்பேன்.

பாலையில் மீனும், ஓடையில் ஒட்டக மாமிசமும் என் நாவிற்கு தேவைப்படும்.
நீ துயரப்படப் போகும் என் நேசத்தை ஒரு போதும் நம்பாதே.

என் பிரியங்கள் சட்டென வந்து விட்டுப் போகும் தும்மலாய் மாறிக் கொண்டேயிருக்கும்.
உன்னால் என்னை காதலிக்கவும் முடியாது, வெறுக்கவும் முடியாது. 

நான் தெளிவான பைத்தியம். அப்படித்தான் எனக்கு இருக்கவும் தெரியும்! ❤

Wednesday, January 3, 2024

கவியவளே - சிறுகவிதைகள்

 


 ~

என்னை சிரிக்க வைத்து உன் சிரிப்பு அழகாயிருக்கிறது என்கிறாள். துரதிஷ்டசாலி என்று தூக்கியெறியப் பட்டவனுக்கு வாழ்நாள் மோட்சமாய் வேறென்ன தேவைப்படப் போகிறது...♥



~

எப்போதாவது உன் உள்ளங்கை என் முகம் தாங்க, உன் கண்ணைப் பார்த்து நான் காதல் சொல்ல வேண்டும்...♥



~

உன் மீது முதல் பிரியம் துளிர் விடும் போதே இவ்வுலகம் ஏதேனும் இடர் நிகழ்த்தியிருக்கலாம்...❤



~

உன் அருகாமை நிகழ்த்தும் அதிசயம் தெரியுமா. உன் பார்வையில் மீண்டும் பிறக்கிறேன். பிறந்த கணத்தில் இறந்து மீண்டும் பிறக்கிறேன். நொடிக்கொரு முறை தாயாகும் உனைத் தத்தெடுக்கிறேன்.

பிரியத்தின் கொண்டாட்டத்தின் பிள்ளையாக..!! ❤


ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...