Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Saturday, July 17, 2021

பயமறியா

 



~

எனக்குத் தெரிஞ்சி நா தனியா இருக்கும் போது கத்துக்கிட்ட விசயங்கள்தான் எனக்குள்ள ஒரு பாசிட்டிவிட்டிய உருவாக்கிருக்கு. அந்த வகையில நானா விரும்பி ஏத்துக்கிட்ட தனிமை எனக்கு சொர்க்கம் தான். அதுக்கு முன்னாடி வரைக்கும் நா ஒரு நெகட்டிவ்வான ஆளுதான். 


எப்பவும் பொலம்புவேன், பிரச்சனையே இல்லாம அழுவேன், காரணமே இல்லாம கோபப்படுவேன். அக்கா கல்யாணம் முடிஞ்ச நேரமா இருக்கட்டும். கொரோனா லாக்டவுன்ல கடைசி நேரமா இருக்கட்டும். நா தனியா கத்துக்கிட்ட நேரங்கள்ல இது ரெண்டும் ரொம்ப முக்கியமானது.


ஒரு சின்ன சம்பவம் சொல்றேன். ஒருநாள் நைட் ஒரு மணி இருக்கும். தனியா இருக்க ஆரம்பிச்ச ஆரம்ப நேரம். கரெண்ட் இல்ல. போன், பவர் பேங்க், லேப்டாப்ன்னு எதுலயுமே சார்ஜ் இல்ல. வெளியில இடி, மின்னலோட மழை வேற. மெழுவர்த்தியும் முடிய போகுது.


டார்ச் லைட்ட ரொம்ப பயமா இருந்தா யூஸ் பண்ணிக்கலாம்ன்னு பக்கத்துலயே வச்சிருந்தேன். அதுவும் ஆஃப் ஆகிட்டா என்ன பண்றதுன்னு பயம். எந்த பக்கம் திரும்பிப் படுத்தாலும் அந்த மின்னலோட வெளிச்சம் பளீர்ன்னு அடிக்கிது. இடி வேற.


அப்பதான் பைத்தியம் புடிச்சது. வேட்டிய மடிச்சி கட்டிட்டு இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு வீட்டு மாடிக்குப் போய்ட்டேன். சட்டைலாம் இல்ல. நைட் ரெண்டு மணி அப்டியே நின்னுட்டேன். ஆடுறேன், பாடுறேன், அழுறேன், பயத்துல ஒலருரேன். மழையில நல்லா நனைஞ்சிட்டேன். ஆனா, தெளிஞ்சிட்டேன்.


அதுக்கப்றம் எவ்ளோ இடி மழையா இருந்தாலும் சகிச்சிட்டு தூங்கிருவேன். நம்ம வருத்தத்தையோ, சோகத்தையோ, பயத்தை இல்ல எந்தவொரு எதிர்மறையான எண்ணங்களையுமே வெளிக்காட்ட ஆளில்லைன்னா ஒரு அளவுதான் தாங்க முடியும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன்.


அதுக்கப்றம் கஷ்டம் பிரச்சனையை எல்லாம் அமைதியாவே கடந்து போக கத்துக்கிட்டேன். நான் தனியா இருந்ததுக்கும், வீட்டோட இருந்ததுக்கும் இடையில உள்ள வித்தியாசத்த ரொம்ப சின்னதா சொல்லீர்லாம்.


அதுக்கு முன்னாடி வரைக்கும் நிறையா அழுதுருக்கேன். கை விட்டு எண்ணுற அளவுக்கு சிரிச்சிருக்கேன். ஆனா, அழ காரணமே இருக்காது. அதுக்கப்றம் நிறைய சிரிச்சிருக்கேன். கை விட்டு எண்ணுற அளவுதான் அழுதுருக்கேன். ஆனா, அழுறதுக்கு நிறையா காரணமிருக்கு.


நாம தேடி போய் கத்துக்கனும்ன்னு அவசியம் இல்லங்க. சூழ்நிலை, மனுஷங்கன்னு நம்மல சுத்தி இருக்குற எல்லாமே கத்துக் குடுக்கும். அவ்வப்போதைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி நேர்மறையா, நிதானமா நம்மல நாம கையாலத் தெரிஞ்சிக்கிட்டாலே போதும். எதுவுமே இல்லைன்னாலும் ஜாலியா வாழலாம்.


ராஜா மாதிரி!

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...