Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, January 14, 2026

கண்ணுக்கெட்டா


~
யாரையும் வெறுக்குறதுக்கு தயாரா இல்லாத போது அல்லது இவங்கள நாம வெறுத்துற கூடாதுன்னு எனக்குள்ள தோனும் போது நா தேர்ந்தெடுக்குற விசயம் இந்த அலட்சியம் தான். அதாவது கண்டுக்காம இருக்குறது. நாம பொருட்படுத்தாத எல்லாரோட எதிர்மறையையும் நாம எளிமையா கடந்துருவோம். நம்ம கவனத்துக்கு அது வராது. 

ஒருத்தர நாம பொருட்படுத்தும் போதுதான் அவங்களோட சின்னச் சின்ன விசயங்கள் கூட நம்மள பாதிக்கிது. அத மாத்தனும்ன்னா தூக்கி சுமக்குறதோ, முழுசா பொருந்திப் போறதோ இல்லாம கண்டுக்காம இருக்குறதுதான் சுலபமான வழி. சிலநேரம் அது கஷ்டமாவும் இருக்கும். எப்டி நெருக்கமானவங்கள கண்டுக்காம இருக்குறதுன்னு குழப்பமா இருக்கும்.

நீங்க, உங்களோட நன்மை தீமையான செயல்கள், அன்றாட வாழ்வியல்ன்னு எத பத்தின எந்தவொரு கருத்தும் எனக்கு கிடையாது. அது உங்களுடைய தனிப்பட்ட விசயம்ன்னு தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க தொடங்குறதுல தான் இது தொடங்கும். நிறையா நேரத்துல குற்றவுணர்ச்சிய தூண்டாம இருக்கவோ, நம்ம நிம்மதிய கெடுத்துக்காம இருக்கவோ அலட்சியம்ங்குறது பெரிய வழி.

ஒரு விதத்துல அவங்களுக்கும் நீங்க செய்யக்கூடிய நல்ல விசயமும் அதுதான். விருப்பமான ஒருத்தரால வெறுக்கப்படுறத யாருமே விரும்ப மாட்டாங்கல்ல. ஒரு அளவுக்கு மீறி தாங்குறதும் தப்புதான், ஒரு அளவுக்கு மீறி குடுக்குறதும் தப்புதான். நீங்க என்னவா நடத்தப் படுறீங்களோ அதுவா நீங்க இருக்குறத விட, என்னவா நடத்தப்படனும்ன்னு நினைக்கிறீங்களோ அதுவா இருக்குறதான் நல்லது.

"யாரையும் பொருட்படுத்துவதற்கில்லை, பொருட்படுத்தும் அளவுக்கு இங்கு எதுவுமில்லை"

Indifference is a better option than Hatred!

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...