Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Saturday, July 17, 2021

சம்பாதிக்க




~
நடுத்தரமான எல்லா மனுஷனுக்குமே முதல் ஆயுதம் மனுஷங்கதான். மிகப்பெரிய பலகீனம் அத்தியாவசிய தேவைக்கு மேல பணம் இல்லங்குறது தான்.

காசு இருக்குறவன் மட்டுந்தான் ஆசையே படனும்ங்குற மனுசங்களுக்கு மத்தியில, விருப்பப்பட்ட ஒரேயொரு ஆசையும் காசில்லங்குறத காரணமா காட்டி கடந்து போறத அனுபவிச்சிருக்கீங்களா. 

ஒரு பொருள வாங்கனும்ன்னு தேடி தேடியே பட்ஜெட்டுக்கு உள்ள அத வாங்க முடியாம கடைசில நம்மலே அத வாங்கவே வேணாம், இத நமக்கு புடிக்கவே இல்லன்னு முடிவெடுக்குறது எவ்ளோ வலிக்கும்ன்னு தெரியுமா. 

விலை அதிகமான ஒரு பொருள காட்டி அத வாங்க ஆசப்பட்றேன்னு சொல்லி அத ஆசப்பட்டதே தப்புங்குற அளவுக்கு உங்கள தண்டிச்சா உங்களுக்கு அதுக்கப்றம் ஆசை வரும்ன்னு நினைக்கிறீங்களா.

நமக்கே பல்லுல பிரச்சனை இருக்கும். ரொம்ப நாள் நெஞ்சு சளியா இருக்கும். அக்காவுக்கோ, அம்மாவுக்கோ எதோவொரு சின்ன ENT பிரச்சனை இருக்கும். 

கொஞ்சம் கொஞ்சம் ட்ரீட்மென்ட் எடுக்குறதுக்கு, அப்பப்ப மாத்திரையா போட்டு சரி பண்ணிட்டு இருக்குறதுக்கு பதிலா மொத்தமா செக்கப் பண்ணி பாத்துர்லாமேன்னு நினைப்போம். 

ஆனா, அதுக்கு மொத்தமா காச செலவு பண்ணி அத்தியாவசியத்துக்கே வழியில்லாம மாட்டிக்கிறதுக்கு, இப்போதைக்கான வாழ்க்கைய மட்டும் பாப்போம்ன்னு வலியையும் கடந்து போயிருக்கீங்களா.

உங்கள சார்ந்த அல்லது உங்களுக்கு நெருக்கமான யாரோவொரு நேர்மையான ஒருத்தர் காசுங்குற ஒரேயொரு விசயம் இல்லாததால செய்யாத தப்புக்கு தண்டிக்கப்பட்றத கண் கூடா பார்த்தும் கேக்க முடியாம இருந்துருக்கீங்களா.

உங்க தரப்பு நியாயமான விவாதம் வெறுமனே பணம் மட்டுமே பலமா இருக்குற ஒருத்தரோட அநியாயமான விவாதத்துக்கு மத்தியில அலட்சியப்படுத்த படுறத அனுபவிச்சிருக்கீங்களா.

காசுதான் இங்க எல்லாத்தையும் நிர்ணயிக்குது. இங்க சாப்பாடுல ஆரம்பிச்சி சாதி வரைக்கும் காசுதான் பேசும். எவ்ளோ ஆண்ட சாதியா இருந்தாலும் காசில்லைன்னா ஐயான்னு கூப்ட மாட்டான்.

நீ இததான் ஆசைப்படனும். நீ இவளதான் விரும்பனும். நீ இந்த வண்டிலதான் பயணிக்கனும். நீ இந்த விலைலதான் சட்டையே போடனும்ன்னு நம்மகிட்ட இருக்குற / இல்லாத காசுதான் நிர்ணயிக்குது.

இத பணத்தாசை, பேராசைங்குற பாணியில புரிஞ்சிக்காம அதோட தேவையையும், உண்மைத் தன்மையையும் புரிஞ்சிக்கிட்டாலே போதும். நீங்க சம்பாதிக்க ஆசைப்படுவீங்க.

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...