Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Saturday, July 17, 2021

அழாமலிரு

 



~

அழ வைக்கிறது ஈசி.


மனசுக்கு நெருக்கமான அல்லது ரொம்ப குற்றவுணர்வா நினைக்கிற, மறக்க முடியாம தவிக்கிற, மறக்க நினைச்சி நினைச்சி சோர்ந்து போன ஒரு விசயத்த நம்மகிட்ட நேரடியா சொல்லும் போது, "நீ அவன்தான"ன்னு அடையாளப் படுத்தப்படும் போது நம்மள அறியாமலே கலங்கிர்ரோம்.


நா ரொம்ப Harsh Type. அவ்ளோ சீக்கிரம் அழ மாட்டேன். அழக் கூடாதுன்னு நினைப்பேன். யார் அழுதாலும் புடிக்காது. எனக்கும் புடிக்காத, நா திரும்பவும் பாக்கக் கூடாதுன்னு நினைக்கிற எத்தனையோ சூழ்நிலைகளை கடந்து வந்துருக்கேன்.


நிறையா பேர் சொல்லி கேள்விப் பட்ருக்கேன். எங்க அண்ணனே சொல்லீருக்கான். நீ யார சந்தோஷப்படுத்த நினைக்கிறியோ, யார் அழவே கூடாதுன்னு ஆசப்பட்றியோ அவங்கதான் உன்ன கஷ்டப்படுத்துவாங்க.


இது நூறு சதவீத உண்மை. நா என்ன பண்ணேன், ஏன் பண்ணேன் எல்லாமே எனக்கு மட்டுந்தான் தெரியும். நம்ம முழுக்க முழுக்க பொய்ன்னு சொல்றவங்க கிட்ட எப்டி நம்ம புரிய வைக்க முடியும். அப்டி புரிய வச்சி மட்டும் என்ன பிரயோஜனம்ன்னு தோனும்.


யாரையும் வெறுத்துற கூடாது. எல்லாரையும் ஏத்துக்கனும்ன்னு தான் பழகிருக்கேன். ஆனா, போற போக்கப் பாத்தா நிறையா பேர வெறுக்குற நிலைக்கு தள்ளப்பட்ருவேன் போல.


சிம்பிளா சொல்றேன்..!


ஒருத்தன் இருக்கான்னா அவனோட இன்றைய வாழ்க்கைய மட்டும் உங்களால முடிஞ்சா Celebrate பண்ணுங்க. முடியலைன்னா வேணாம். எத்தனையோ நாளைக்கு முன்னாடி அவன் தெரிஞ்சோ, தெரியாமலோ செஞ்ச ஒரு விசயத்த வச்சி யாரையும் Identity பண்ணாதீங்க.


இது எப்டின்னா கிட்டத்தட்ட ஒரு இக்கட்டான சூழ்நிலைய கடந்து கொஞ்சம் வெளிய வர்ரதுக்காக முயற்சி பண்ணிட்டிருக்குற ஒருத்தன, திரும்பவும் அதே மனநிலைக்குள்ள போய் விட்டுப் போன "Guilty conscious" லயே இருந்து வாழ வழி செய்ற மாதிரி.


வெறும் வார்த்தைன்னு நினைச்சி பேசிட்டு போறது ஒருத்தர எந்தளவு மனசளவுல பாதிக்கும்ன்னு பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் தெரியும். நல்லா பேசுவோம், விவாதிப்போம்ன்னு ஒருத்தரோட மன அழுத்தத்த தூண்டி விட்டு வேடிக்கை பாக்குறதுதான் வன்மம்.


பேச்சும், வார்த்தையும் மிகப்பெரிய ஆயுதங்கள். அதால ஒருத்தன வாழ வைக்கவும் முடியும். கல்நெஞ்சக்காரனையும் அழ வைக்கவும் முடியும். முடிஞ்சளவு யாரையும் கலங்க வைக்காம, யார்ட்டயும் வெறுப்ப சம்பாதிக்காம வாழ்ந்துட்டு போய்றனும்.


முடிஞ்சா வாழ வைங்க. முடியலைன்னா வாழ விடுங்க. வழிமறிச்சி குற்றவுணர்வுலயே கிடந்து மக்கிப் போக வச்சிராதீங்க.

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...