~
கைவசம் எதுவுமில்லாம இருக்கும் போது கூட தன்னைத் தானே ராஜாவா மெச்சிக்கிறதுக்கு மனச பக்குவப்படுத்திக்கனும்.
எல்லாமே பூஜ்ஜியத்துல இருந்துதான் ஆரம்பிக்கும். இங்க ஒவ்வொருத்தரோட வாழ்க்கை வடிவமைப்பும் வெவ்வேற மாதிரிதான் இருக்கும். யாரோடையும் ஒப்பிட்டு பாத்துக்க தேவையில்ல.
நாம நமக்கு சரின்னு தோனுறத செய்வோம். எதுவுமில்லாத நிலைலயும் நம்மல நாமலே கொண்டாடிப்போம். நாம மகிழ்ச்சியா இருந்தாலே பாதி பிரச்சனை இருக்காது.
தைரியமா சொல்லனும். எங்கிட்ட எதுமில்லாத நிலைலயும் நிதானத்த இழக்காம எல்லா விசயத்தையும் கையாள முடியும்ன்னு. அதான் சொத்து.
நம்மலத் தாண்டி உள்ள இருக்குற ஆழ்மனச சந்தோஷமா வச்சிருந்தாலே போதும். சலிக்க சலிக்க வாழ்ந்து தீர்க்கலாம்!


Nallaaruku 😍
ReplyDelete