~
எல்லா சூழ்நிலைய கையாளுறதுக்கும் அல்லது ஒரு இக்கட்டான சூழ்நிலைல இருந்து மீண்டு வர்ரதுக்கும் கண்டிப்பா வேறு விதமான நம்ம மனச நிதானப்படுத்துற ஏதோவொரு பிடிமானம் தேவைப்படும்.
சிலருக்கு வாழ்றதுக்கான காரணமாவே குழந்தைங்கதான் இருப்பாங்க. சிலருக்கு அவங்களோட கனவு, சிலருக்கு படிப்பு, ஆசைன்னு ஏதோவொரு பிடிமானத்துல தான் நாட்கள் நகர்ந்துட்டிருக்கும்.
வாழ்நாளுக்கான காரணத்துல நம்மலோட கருத்துக்கும், எண்ணத்துக்கும் நேரடியான இடம் கண்டிப்பா தேவைப்படும். அப்படியான இடத்துல நமக்கு புடிச்ச விசயங்கள பொருத்தி அதுக்காக வாழ்ந்து முடிஞ்ச அளவு அத கொண்டாடிட்டு போயிருவோம்.
சொல்லப் போனா வாழ்க்கைல எல்லாமே சில்லுக்கருப்பட்டி படத்துல வர்ர Cornetto ஐஸ்கிரீம் கதைதான். எதாவதொரு நல்ல நாளுக்காக காத்திருந்துதான் இங்க ஒவ்வொரு நாளையுமே கடந்துரோம். அந்த கடைசி உள்ள சாக்லேட் பிட்தான் நம்ம சந்தோஷம். கண்டிப்பா கிடைக்கும்.
எல்லாருக்கும் சந்தோஷத்த குடுக்க ஒருநாள் வரும்...❣️


No comments:
Post a Comment