~
அத்தனை பிரச்சனைக்கு மத்தியிலும் ஒரு பூ, பூக்கத்தானே செய்கிறது.
நான் என் தேவையாக இந்த கவிதையை பார்க்கிறேன். இடர்களுக்கு ஆளாகும் போது அதன் மூலமாய் அடைந்த எதோவோர் நன்மையை சேமித்துக் கொள்ள நினைக்கிறேன்.
நான் எப்போதும் சொல்வதைப் போல நேர்மறையை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். என் மகிழ்ச்சி இதுதானென்று நிரந்தரமாயிருக்கவே தேவை இல்லை. உங்களைக் கடந்து கொண்டிருக்கும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சி இருக்கிறது.
நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன் என்பதற்கு மேலான பெரிய நேர்மறை கண்ணோட்டம் எதுவுமேயில்லை. எனக்கு இதிலும் மகிழ்ச்சி, அதிலும் மகிழ்ச்சி என்று கடந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான்.
மகிழ்ச்சியெல்லாம் தொற்று நோய் போலத்தான். உங்களைத் தாண்டி எல்லா பக்கமும் பரவிக் கொண்டேயிருக்கும். விதைப்பதை சந்தனமாகவே விதைப்போம். வாழ்நாளுக்கும் நம்மை நாமே கொண்டாடிக் கொள்வோம். அனைவருக்கும் அன்புகள்.


No comments:
Post a Comment