~
கிரிக்கெட் விளையாடுறத விட்டு ரொம்ப நாளாச்சு. கிரிக்கெட் பாக்குறத விட்டு நாளஞ்சி வருஷமாச்சு. புத்தகம், கவிதை பத்தின அறிவோ புரிதலோ கிடையாது. படிச்சதும் கிடையாது.
கவிதை பத்தி பேசுறத கேப்பேன். அதுவும் எப்பவாச்சும் தான். சினிமா எதோ ஓரளவுக்கு புரியும். உலக சினிமா பத்திலாம் ஒன்னுமே தெரியாது. தமிழ் சினிமா பத்தி கொஞ்சம் கொஞ்சம் தெரியும், புடிக்கும்.
Sports, Art, Dance, Speech இப்டி எந்தவொரு Competition-லயும் School-ல அவ்வளவா கலந்துக்கிட்டதில்ல. College-ல அதுக்கு வாய்ப்பே இல்லாம போய்ருச்சு. அதுக்கான நேரமோ, ஊக்குவிப்போ இல்ல. அப்டியே எதுலயும் Interest இல்லாமலே போய்டுச்சு.
வேலைதான் பாப்பேன். ஆனா, எந்த வேலையா இருந்தாலும் பாப்பேன். அவ்ளோதான். சித்தாள், காடு கொத்துறதுல ஆரம்பிச்சி Electrician, Plumber, Driver-ன்னு நிறையா Part time வேலை பாத்துருக்கேன்.
நம்மல நம்மலே Dominate பண்ணிக்க கூடாதுன்னு மட்டும் எப்பவுமே நெனப்பேன். எல்லாருக்கும் அவங்க அவங்க வாழ்க்கைய பொறுத்துதான் Interest வரும். சிம்பிளா சொல்றேன். இங்க திறமை இல்லாதவங்க யாருமே இல்ல.
நான் நான்தான். என்னைய யார் கூடயும் நான் Compare பண்ணிக்க போறதில்ல. எந்த சூழ்நிலைலயும் நம்பிக்கையையும், தைரியத்தையும் விட மாட்டேன். அவ்ளோதாங்க. ஜாலியா இருப்போம்!


No comments:
Post a Comment