
முடிவெடுத்துக் கொண்டு இருக்கும் போதே இயல்பு நிலைக்கு திரும்பி எழுந்து போய் விடுகின்றவர் அதற்கு பின்னர் அவருக்காக வாழ்வதும், அவர் மகன்கள் சொத்துக்காக தேடுவததென்றும் கதை நகர்த்தப்படுகிறது.
கருப்புதுரைக்கு கே.டி என்று சுருக்கமாக பெயர் வைக்கிறான் பிறந்ததிலிருந்து கோவிலில் வளரும் குட்டி. குட்டியின் குறும்பும், பேச்சும் பிடித்துப் போன கருப்புதுரை கோவிலில் இருந்து தன்மானத்திற்காக கோபத்தில் வெளியே வந்த குட்டியுடன் வாழ்க்கையை நகர்த்துகிறான்.
பிடித்த வேலை, பிடித்த இடத்தில் வீடு, இரண்டு பேருக்கு மட்டுமேயான வாழ்க்கை என்று நகர்கிறது. ஒரு வளர்ந்த குழந்தை, சிறிய கிழவன் என்ற சாயலில் நகர்கிறது. தாத்தாவின் பிடித்த ஆசைகளை நிறைவேற்றும் குட்டி. குட்டியை எதிலும் விட்டுக் கொடுக்காத கருப்புதுரை.
முக்கியமாக பிரியாணி. கருப்புதுரை பிரியாணி சாப்பிடுவதை ரசிக்கவே பிரியாணி சாப்பிட வருவோர். பிரியாணியின் மீது கருப்புதுரைக்கு இருந்த ஈர்ப்பு, பேராசை என்பதெல்லாம் அவ்வளவு அழகு. பிரியாணி பிரியர்களுக்கு நிறைய பிடித்த காட்சிகள் தேறும்.
கதாநாயகன், கதாநாயகி என்றில்லாமல் சின்னச் சின்ன ரசிக்கக் கூடிய காட்சிகள், கதைக்களத்திற்காக பார்த்த சமீபத்திய படங்களில் மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நல்ல மனநிலைக்கு கொண்டு வந்து விட்டு விடும் படம். பிடித்திருக்கிறது.

No comments:
Post a Comment