Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Friday, July 16, 2021

சர்வம் தாளமயம் (2018)



ஜீ.வி.பிரகாஷ் ஒரு பேட்டியில் சொல்லியிருந்த படி இது அவருக்கான ஒரு கனவுப்படம்தான். இசைக்கான குறிப்பாக மிருதங்கத்திற்கான படம். இசை என்ற பொதுவான விசயத்தில் உள்ள பிரிவினையை காட்டும் படம்.


ஒரு காட்சியில் கேரட் வெட்டுவதில் இருந்து ஆதி தாளம் எட்டெட்டு சீராக கொண்டு வருகிறார் என்று சொல்லும் போது இசை ஊறிப் போன ஒரு உயிராக ஜீ.வி தெரிய ஆரம்பிப்பார். இந்த இடத்தில் இவரை விட ஒரு பொருத்தமான நாயகன் இந்த படத்திற்கில்லை.


தன் இசையின் விடியலுக்கான காலத்திற்காக காத்திருக்கும் கூட்டத்திலிருந்து வெளிவந்த ஒருவன் தன் குருவையும் ஏமாற்றாமல் தனக்குப் பிடித்ததை அடி ஆழம் வரை சென்று உள்ளுணர்ந்து படித்து வெற்றி பெறுவதே கதையின் சாராம்சம்.


பிளாஸ்டிக் டம்ளரில் டீ தருவதற்கும், கண்ணாடி டம்ளரில் டீ தருவதற்கும் இடையிலான சாதிய பிரிவினை இந்த நவீனத்துவ காலத்திலும் உள்ளது. இறந்த தோலில் அன்பு செலுத்தி இசையைக் கொண்டு வரும் இனத்திடம் அறம் காட்ட ஆளில்லை.


பறைக்கும், மிருதங்கத்திற்கும் இடையிலான உழைப்பாளிகளுக்கும் அதை உருவாக்கி விற்பவர்களின் நிகழ்கால ஏழ்மை நிலையையும் கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறேன் என்ற பெயரில் இன்னமும் அதை செய்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பார்த்திருக்கும்.


மிருதங்க தாளத்தின் மேல் கொண்ட அபரிமிதமான காதலின் வெளிப்பாட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படம் மொத்த இசைக்கானது. குறிப்பாக எளிமையாய் இருந்து செல்வம் கொட்டும் கர்நாடக சங்கீதத்தில் இருந்து தடாலடியாய் இருந்து ஒடுக்கப்பட்டிருக்கும் பறை வரை சமமான இசைதானென பேசியிருப்பதில் சர்வமும் தாள மயமாகிறது.

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...