~
துயரமான செய்திகளை இலகுவாக பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒருவன். எதையும் கோலாகலமாக கொண்டாடாத, எதிலும் பூதாகரமாக வெடித்துச் சிதைக்காத ஒருவன். இழப்புகளை தேவையென ஏற்றுக் கொள்ளும் ஒருவன். அமைதியான முறையில் அத்தனையிலும் நிதானித்து பொறுமையாக நகரும் ஒருவன். தன் சிந்தனைக்கு அப்பார்ப்பட்ட எதையும் கைக்குள் அடக்காமல் பறக்க விட்டிருக்கும் ஒருவன். நம்பிக்கை வேர்களை தளர்த்தி தன்னுலகை பெரிதாக்கிக் கொண்ட ஒருவன்.
அவனுக்கு தன்னுடனான ஒப்பந்தங்களை தனக்குள்ளே கூட தெளிவாக சொல்லிக் கொள்ளத் தெரியாது. நிகழ்வுகளை விரும்பாமலும், வலிகளுக்கு அஞ்சாமலும், அடுத்த கணத்தை யோசிக்காமலும் அவனால் இருக்க முடியும். முடிவிலியான விளக்கங்களுக்கு தகுதியான ஒருவனை யாருமே கண்டுகொள்ளாமல் விடுவதுதான் நல்லதும் கூட. ஏதுமில்லாமல் தொடங்கிய ஒருவனுக்கு அது ஏற்புடைய சுதந்திரமானதாகவும் இருக்கும்.
❣️

No comments:
Post a Comment