ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அந்த கதை பயணிக்கக் கூடிய மக்கள் மத்தியில் கொஞ்ச நாள் தங்கியிருந்து அந்த இடத்த பற்றி, மக்களோட பழக்கவழக்கம் பற்றி, பேச்சுவழக்கு பற்றி தெளிவா தெரிஞ்சிட்டு அதுக்கு பின்னாடிதான் ஷூட்டிங் ஆரம்பிப்போம்ன்னு ஒரு வெற்றிமாறன் ஒரு பேட்டியில சொல்லுவாரு.
இப்ப வரைக்கும் வடசென்னை நகராம இடம் பிடிச்சிருக்குன்னா காரணம் அந்த இடத்தோட மக்களோட பேச்சுவழக்க அப்டியே பிரதிபலிச்சி காட்டிருக்குறதுதான். ஒவ்வொரு கதையிலிருந்தும், ஒவ்வொரு காட்சியில இருந்தும் தனித்துவமா கத்துக்க நிறைய குடுக்க கூடிய ஒரு இயக்குனர் வெற்றிமாறன்.
இன்னும் எத்தனை படம் எடுத்தாலும் தாராளமா ஓடும். எல்லாருக்கும் முன்னோடியா இருக்குற அளவுக்கு திறமை இருக்கக் கூடிய மனுஷன். அவரோட ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடக் கூடிய எத்தனையோ ரசிகர்கள்ல நானும் ஒருத்தன்னு பெருமையா சொல்லுவேன்.
வெற்றி!


No comments:
Post a Comment