Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Friday, July 16, 2021

யுவன் சங்கர் ராஜா



கொஞ்ச நாளாவே அதிகமா பயன்படுத்துற வார்த்தை இதுதான். சின்ன வயசுல இருந்து ரஹ்மான், இளையராஜான்னு இருந்துட்டு மூணாவது நாளாவது இடத்துல கூட யுவன் பேர சொன்னதில்ல. யுவன முதல்முறையா நேர்ல பாத்தப்ப கூட ரொம்பலாம் ஆச்சரியப்படல. ஜஸ்ட் ஒரு செலிப்ரட்டி. இளையராஜாவோட பையன் அவ்ளோதான்னு நெனச்சிட்டிருந்தேன்.


சமீபமா ஒரு வருஷத்துக்குள்ள மனசுக்கு நெருக்கமான ஒரு பேரா "யுவன்"ங்குற பேரு மாறிருச்சு. இசைங்குற ஒரு விசயம் நம்மல எந்தளவு தெளிவாக்கும், ரசிக்க வைக்கும், வலிய மறந்து தூங்க வைக்கும், அடுத்த கட்டத்த நோக்கி நகர வைக்கும்ன்னு தெரிஞ்சிக்கிட்டது யுவன் இசை, யுவன் குரல் மூலமாதான். 


போன்ல Spotify, Wynk, South radios ன்னு எல்லா ஆன்லைன் ப்ளே ஆப்ஸ்லயும் ரீசன்ட்ல இருக்குறது தலைவன்தான். எல்லா நிலைமைலயும் எனக்கான ஒரு நண்பனா நின்னது யுவனோட இசைதான். யுவன் இசைக்குன்னு தனி பட்டாளமே இருக்குன்னா காரணமும் அதுதான். அது எல்லா சூழ்நிலைக்குமானதா இருக்கும்.


"இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும். நீ மட்டுந்தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கி விடும்" இந்தப் பாட்டு மூலமா பல இருட்டான தனிமையையும் கடக்க வச்சது யுவன்தான். யுவனோட இசைதான்..!!


கொஞ்ச நாள் போகப் போகதான் தெரிஞ்சது நா தேடித் தேடி கேக்குற நிறைய பாட்டு யுவனோடது. கற்றது தமிழ், பருத்தி வீரன், புதுப்பேட்டைலாம் ஒவ்வொரு தடவையும் ஆச்சரியக் குறில நிக்க வைக்கிற ஆல்பம்ஸ். ஒவ்வொரு பாட்டும், பேக்ரவுண்ட் ஸ்கோரும் நம்ம மனசோட அவ்ளோ உயிர்ப்பா சேர்ந்திருக்கும்.


"செவ்விளநீ சின்னத்தாயி, உன்ன சிறையடைக்க போறேன் வாடி"ன்னு ஒரு பக்கம் ரசிச்சி தூங்கிட்டு காலைல எந்திரிச்சி "கத்தரிப்பூ ரவிக்க போட்ட சின்ன பைங்கிளி, உன்ன கோட்டருக்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி"ன்னு குத்தாட்டம் போடலாம். யுவன் ஒரு கொண்டாட்டக்காரன்னு போன வருஷம் யாரோ சொன்னதுதான் நியாபகம் வருது.


வலியோட, கஷ்டத்தோட இருந்த நிறைய இரவுல உடைஞ்சி அழ வைக்கவோ, அழுது முடிச்சி நிம்மதியா தூங்க வைக்கவோ யுவனோட இசை கை கொடுத்துச்சு. அப்பா பேர்ல சம்பாரிச்சிட்டாரு, இளையராஜா ட்யூன்ல காபியடிச்சி போட்றாருன்னு வன்மத்த கொட்றத நிறுத்துங்க. வெறும் காபியடிக்கிற ஒருத்தனால இவ்ளோ ரசிகர்கள சம்பாதிக்க முடியாது.


சிம்பு, விஷால் தொடங்கி நிறைய பேர மாஸ்ஸா பாக்க வச்சது யுவனோடு BGM தான். திமிரு, மங்காத்தா, பில்லான்னு யுவனோட BGM பேச படமெல்லாம் குவிஞ்சி கெடக்கு. 7G ரெயின்போ காலனி, யாரடி நீ மோகினிலாம் இன்னமும் நிறைய பேர கிறக்கி வச்சிருக்குற ஆல்பம்ஸ். இப்டியே படம் பேர் சொல்லி பேசிக்கிட்டே போனா யுவன கொண்டாட யுகமே தேவைப்படும்.


இப்பவும் யுவன் இசையிலான படம்ன்னா அதுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கு. இன்னும் நிறைய நிறைய ஜெயிச்சிட்டேதான் இருப்பாரு. ஏன்னா அதான் தலைவன். எதோவொரு பேட்டியில தனுஷ் சொல்வாரு "தமிழ் சினிமா இசைல அந்த பக்கம் உள்ள பேர் மாறிக்கிட்டே இருக்கும், இந்த பக்கம் யுவன் பேர் அப்டியேதான் இருக்கும்"


தலை(யு)வன் தான்!

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...