~
யார் யாரோவாக வந்து அவர்களே நமக்கு போதுமானவர்களாக மாறி விடுகிறார்கள். மனிதர்களை நினைவுகளாக்கவும், நியாபக அழிவில் இருந்து மிட்டெடுக்கவும் யாரோ ஒருவர் வந்து விடுகிறார்கள். தனித்து இருந்தால்தான் நிம்மதி என்று சொல்லிக் கொண்டே யாரையாவது தேடிக்கொண்டோ, யாருக்காகவாவது காத்திருந்தோ பழகிவிட்டோம்.
அன்பின் பிடியில் சிக்கி, கொண்டாடிக் களைத்து, சேர்ந்து வளர்ந்து, பிரிவில் இழந்து, நினைவில் வீழ்ந்து, அழுது தீர்த்து, வாழ்வோடு இயைந்து அத்தனையையும் கடந்து அடுத்தடுத்த மனிதனும் அதையே தேடிப் போகிறானென்றால் அது எத்தனை அபூர்வமானதாயிருக்கும்.
ஆயிரம் பேர் திட்டியும், சபித்தும். எத்தனையோ பேர் அனுபவித்தும், எத்தனையோ பேரை வாழ வைத்தும், ஒரு யுகமே கடந்தும் இன்றளவும் சலிக்காத ஒரு விசயத்தைக் குறிப்பிடச் சொன்னால் காதலைத் தவிற வேறெதைக் காட்ட.
காதலித்து மடி ❣️

No comments:
Post a Comment