~
சமரசமற்ற அன்பும், பரிவும் நமக்குள் சரிசமமாக பகிரப்பட்டது.
நீ, நானென்ற இரு வேறு சூழ்நிலைகளை அழகானதொரு வீடாக மாற்றினோம்.
ஏராளமான மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் வனமாகி வாழ்ந்தோம்.
சுற்றுச்சுவர் அற்ற அருங்காட்சிகமாக பலர் ஆசைப்பட கொண்டாடித் திரிந்தோம்.
புன்முறுவல் தொடங்கி வெடிச்சிரிப்பு வரை உலகிற்கு இலக்கணம் எழுதிக் கொடுத்தோம்.
வெவ்வேறு நிலைப்பாடுகளை விவாதித்து தீர்வோடோ, தீர்வில்லாமலோ அடுத்தடுத்த விவாதங்களை தொடுத்தோம்.
நட்சத்திரங்களை அகற்றி விட்டு வானத்தை முழுமையாக நமதாக்கியதாக கதைகள் பேசியிருந்தோம்.
பேரன்போடு பெருங்காதல் செய்தோம்.
நம்மளவில் எவ்வித விமர்சனங்களும் இல்லாத மனிதர்களாகவே இருந்தோம்.
இருந்தும், அறிமுகமற்ற அந்நியர்களாகவே இருந்துவிட்டுப் போயிருக்கலாம் என்ற நிலைக்குப் போய் நம் பிரிவு நிகழ்ந்திருக்கக் கூடாது என்பதே என் வருத்தம்.
❣️

No comments:
Post a Comment