என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை நான் பார்த்ததில்லை.
தப்பென்று தெரிந்த அடுத்த கணம் மன்னிப்பு கேட்க தயாராகி விடுவேன்.
கோபத்தில் ஏதேனும் பேசி விட்டால் தூங்குவதற்கு முன் போன் செய்து மன்னிப்பு கேட்பேன்.
பிடித்திருந்தால் யோசிக்காமல் பாராட்டி விடுவேன்.
தூங்குவதற்கு முன் மனதளவில் எல்லோரையும் மன்னித்து விடுவேன்.
ஒரு முழு இரவை ஒருவரின் மீது கோபத்தோடு கடத்தத் தெரியாது.
யாருடைய மனஸ்தாபத்தோடும் அடுத்த நாளை தொடங்க பிடிக்காது.
மகிழ்ச்சியாக வாழ அல்லது சாக மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்க வேண்டும்.
கண்டிப்பாக இன்று இரவு இறந்து விடுவோமென்று, மனதின் ஒரு ஒரத்தில் நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றே பழகிவிட்டது.
அப்படி சாகாமல் விழித்தேன் என்றால் ஒரேயொரு பெரிய ஆசையோடு அடுத்த நாளை தொடங்குவேன்.
கண்டிப்பாக நான் என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை சந்திக்கவே கூடாது.

No comments:
Post a Comment