~
ஒரு தேநீர் மிடரு போல ஒவ்வொரு மனிதர்களிடமும் பேச விழைகிறேன். சுவாரசியமற்ற மனிதர்களென்று யாருமேயில்லை. ஒவ்வொருவரின் கதையிலும் தனக்கென்றொரு ஒரு கதாநாயகப் பாத்திரம் வைத்துக் கொள்வார்கள்.
நீங்களும் நானும் அப்படித்தான். இங்கு யாருக்கும் உடனிருப்பவனாக இருக்கப் பொருந்தவில்லை. என்னோடு யார் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்றுதான் சொல்ல நினைக்கிறோம்.
நிறைய கதைகள் தனக்கு நடந்தவைகளைச் சுற்றியே பேசும் போது, சுற்றி நடப்பைகளுக்கு இடையில் நாம் என்ன செய்கிறோம் என்று சில முறை யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். உண்மையில் இங்கு யாரும் மையத்திலும் இல்லை, யாரும் வெளியிலும் இல்லை.
நீங்களும் நானுமாய் ஒரு குவளைத் தேநீர் போல் கலந்து ஒன்றாய்தான் இருக்கிறோம். முதல் மிடருக்கும், இரண்டாம் மிடருக்குமான இடைவெளியில்தான் இத்தனை நேசமும், வாழ்தலும்.

No comments:
Post a Comment