~
சில நாட்கள சாதாரணமா கடந்துற முடியிறதில்ல. எவ்வளவு இறுக்கி பிடிச்சாலும் சில விசயங்கள மறைச்சிட்டே இருக்க முடியிறதில்ல. சில நினைவுகள மறந்துட்டு நிம்மதியா வாழ்ந்துறதுக்கு மனசும் அனுமதிக்கிறதில்ல. நாட்கள நியாபகம் வச்சிருக்குறதோட மிகப்பெரிய பலகீனம் இது.
சிலநேரம் மறக்குறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லுவாங்க. அது அப்டியில்ல. மன்னிக்கனும். எந்த விதத்திலும் தன் எண்ணத்தால கூட விரும்பி நேசிச்ச ஒருத்தருக்கு காயத்த குடுக்க கூடாதுன்னு மன்னிச்சிறனும். ஆனா, கடக்க முயற்சி பண்ணி, பண்ணி தோத்துக்கிட்டே இருக்குற ஒருத்தனுக்கு மறக்குறது சாதாரண விசயமில்லல.
இந்த நாள், இத்தன மணி, மதியம், காலைன்னு ஒவ்வொரு நிமிஷமும் அத்தனை அத்தனை எதிர்மறையான நினைவுகளையும் அசைபோட்டு இருந்தாலுல், எந்தவொரு வெளிப்படையான தாக்கத்தையும் நிகழ்த்தாம அமைதியா கடந்து போக ஆயிரம் காரணங்கள் இருக்கும். உடைய ஒரேயொரு தேயாத நினைவு போதும்.
நீங்கள் நேசிக்கக் கூட வேண்டாம். வாழ்வென்பது மிகப்பெரிய சாபமென்று நினைக்கக் கூடிய விளிம்பிற்கு எந்த உயிரையும் நகர்த்தாதிருங்கள்!

No comments:
Post a Comment